உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா
உள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவா
கரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்
கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பாடு பாடு பாடு கிருஷ்ணனையே என்றும் போற்றி பாடு
நாடு நாடு நாடு அவன் சேவடியை தினமும் நாடு
உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா
உள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவா
கரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்
கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பிருந்தாவனத்தில் மாயகள்ளன் மாயகண்ணன் நீதானே
அன்னிக்கரையில் வெண்ணெய் உண்ணும் செல்லபிள்ளை நீதானே
அனைத்து மழலை சிரிப்பிலும் புன்னைக நீயே கண்ணா
உன் மழலை அழகை கண்டு நானும் வியக்கிறேன் கண்ணா
அனைத்து மழலை சிரிப்பிலும் புன்னைக நீயே கண்ணா
உன் மழலை அழகை கண்டு நானும் வியக்கிறேன் கண்ணா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பாடு பாடு பாடு கிருஷ்ணனையே என்றும் போற்றி பாடு
நாடு நாடு நாடு அவன் சேவடியை தினமும் நாடு
ஆயிரம் ஜென்மத்திலும் ஆதரிப்பவன் நீயே கண்ணா
யுகயுகமாய் நீயும் வந்து காட்சி தருகின்றவா
எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் திசைமாற மறுக்குதே
கால்களோ உன் பாதம் தேடி அன்றும் என்றும் நடக்குதே
எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் திசைமாற மறுக்குதே
கால்களோ உன் பாதம் தேடி அன்றும் என்றும் நடக்குதே
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பாடு பாடு பாடு கிருஷ்ணனையே என்றும் போற்றி பாடு
நாடு நாடு நாடு அவன் சேவடியை தினமும் நாடு
வெண்ணெய் உண்ட கைகளினாலே என்னை கொஞ்சம் தொடவா
குழந்தையான உன்மடியில் நான் உறங்க ஓடி வா
பறந்து வரும் பருந்ததில் பாய்ந்து ஓடி வந்தவா
வந்த காலில் நிற்கிறாயோ அன்னிக்கரை ஊரதில்
பறந்து வரும் பருந்ததில் பாய்ந்து ஓடி வந்தவா
வந்த காலில் நிற்கிறாயோ அன்னிக்கரை ஊரதில்
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பாடு பாடு பாடு கிருஷ்ணனையே என்றும் போற்றி பாடு
நாடு நாடு நாடு அவன் சேவடியை தினமும் நாடு
உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா
உள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவா
கரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்
கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தா
பார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd