Type Here to Get Search Results !

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 23

திருப்பாவை - பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.....

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 3

கூவின பூங்குயில் கூவின கோழி

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்

தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!....

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.