Type Here to Get Search Results !

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்
மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்
உபதேசம் செய்தாயே யுத்த களத்திலே
உலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா
ஆராரோ ஆராரோ சொல்லட்டுமா கண்ணா
ஆனந்த கூத்தாடும் அதங்கோடு கண்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா அதங்கோடு கிருஷ்ணா
சுதர்சனத்தை சுழற்றிய கிருஷ்ணா

தேவகி பாலனே தேவர்களின் தலைவனே
அளிக்கும் கடவுளே அள்ளி தரும் கண்ணா
புற்றிலே வளர்ந்தவனே சுயம்புவாக வந்தவனே
பரளி ஆற்றிலே நீராட செல்லும் பஞ்ச வர்ண கண்ணா
குழந்தை கண்ணனே குலம் காக்கும் மன்னனே
மன்னனையும் திரும்பி பார்க்க வைத்த மண்ணை உண்ட கண்ணனே

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா
ஆராரோ ஆராரோ சொல்லட்டுமா கண்ணா
ஆனந்த கூத்தாடும் அதங்கோடு கண்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா அதங்கோடு கிருஷ்ணா
சுதர்சனத்தை சுழற்றிய கிருஷ்ணா

பார்த்தனின் சாரதியே கீதையின் சாரமே
பாலாலே அபிஷேகம் பஞ்சாமிர்த கண்ணா
கும்பிட்ட கரங்களோ பிரியவே மறுக்குது
எம்புட்டு ஆசை உனை வணங்கி துதிக்க
தங்க கவசம் தகதகவென மின்ன
எங்க மகராசா ஜொலிப்பதை கண்டு கால்கள் நகர மறுக்குதய்யா
தீய வேலை செய்திடுவா பூதனை மாய கண்ணனிடம் ஆகாதம்மா உந்தன் வேலை

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா
ஆராரோ ஆராரோ சொல்லட்டுமா கண்ணா
ஆனந்த கூத்தாடும் அதங்கோடு கண்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா அதங்கோடு கிருஷ்ணா
சுதர்சனத்தை சுழற்றிய கிருஷ்ணா

நீலமேக வண்ணன் புல்லாங்குழல் ஊதி
நீலமயில் பீலி அசைந்திட நீல கடலிலே வாசம் செய்கிறான்
சியாமளா கோமளா சாளகிராமங்களில் மாதவா கேசவா வாசம் கொண்டவா
பாரினை காத்திடுவான் பார்த்தசாரதி
கோலவிழி கண்ணுடையான் கோவிந்தன்
மாய வேலை செய்திடுவான் மாதவன்
கேளிக்கை காட்டிடுவான் கேசவன்
ஆலிலையில் தவழ்ந்திடுவான் ஆதிகேசவன்

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா
ஆராரோ ஆராரோ சொல்லட்டுமா கண்ணா
ஆனந்த கூத்தாடும் அதங்கோடு கண்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா அதங்கோடு கிருஷ்ணா
சுதர்சனத்தை சுழற்றிய கிருஷ்ணா

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்
மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்
உபதேசம் செய்தாயே யுத்த களத்திலே
உலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா
ஆராரோ ஆராரோ சொல்லட்டுமா கண்ணா
ஆனந்த கூத்தாடும் அதங்கோடு கண்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா அதங்கோடு கிருஷ்ணா
சுதர்சனத்தை சுழற்றிய கிருஷ்ணா

ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணா
ஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.