Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeSpiritualityநவராத்திரி - அம்பிகையை மயில் வாகனம்

நவராத்திரி – அம்பிகையை மயில் வாகனம்

அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை “கவுமாரி என்றும், “குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி “கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். “வேல் என்றால் “வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.

நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here