Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeSpiritualityஉலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம் – அதிசய மருத்துவ குணங்கள்

உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம் – அதிசய மருத்துவ குணங்கள்

உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம் – அதிசய மருத்துவ குணங்கள்

கோவில்களில் சாமிக்கு நைவேத்தியமாக வழங்கப்படும் உணவுப் பொருட்கள், அந்த கோவிலுக்கு உரிய முறையில் தயாரிக்கப்பட்டு, தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன. தெய்வங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருப்பதி கோவிலில் லட்டு, மதுரை அழகர் கோவிலில் சம்பா தோசை போன்ற பிரசித்தி பெற்ற பிரசாதங்கள் உள்ளன. அதேபோல், பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு மிக முக்கியமானது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

பழனி என்ற பெயரின் அடிப்படை
பழனம் என்ற சொல்லிலிருந்து பழனி என்ற பெயர் உருவானது. பழனம் என்பது விளைச்சல் நிறைந்த நிலத்தை குறிக்கும். நல்ல விளைச்சல் நிறைந்த பகுதியில் இருப்பதால், பழனி என அழைக்கப்படுவதாகும்.

பழனி பஞ்சாமிர்தத்தின் சிறப்புத்தன்மை
சிவனும் பார்வதியும் தமது இளைய மகன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்ததால், அதற்குப் பிறகு பழனி என பெயர் மாறியதாக கூறப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3வது படை வீடாக திகழ்கிறது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். இக்கோயிலில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.

மூலஸ்தானத்தில் பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால் நவபாஷாணத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், அபிஷேகம் செய்யப்பட்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என கருதப்படுகிறது.

பழனி பஞ்சாமிர்தம் – மருத்துவ குணங்கள்
பழனியில் தரப்படும் பஞ்சாமிர்தம் பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பேரிச்சம்பழம் ஆகிய ஐந்து பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. அதனால் இதற்கு பஞ்சாமிர்தம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மூலப்பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கூடுதல் சுவைக்காக நெய் மற்றும் ஏலக்காய்கள் சேர்க்கப்படுகின்றன.

விருப்பாச்சி வாழைப்பழங்கள்
பழனியில் வளர்க்கப்படும் சிறிய அளவிலான விருப்பாச்சி வாழைப்பழங்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. நீர்ச்சத்து குறைவாக இருக்கும் இந்த வாழைப்பழங்கள், பழனி மலையிலுள்ள விருப்பாச்சி கிராமத்தில் வளர்க்கப்படுகின்றன. மேலும், கொட்டையில்லாத பேரீச்சம்பழமும் சேர்க்கப்படுகிறது.

செயற்கை பொருட்கள் சேர்க்காமல், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தம், ஒரு சொட்டு தண்ணீரும் சேர்க்கப்படாது. இதை எடுத்துப் பயன்படுத்தினால் பக்தர்களின் நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. பல மாதங்களும் கெட்டாமல் இருக்கும்.

தண்டாயுதபாணி சிலை அபிஷேகம்
முதலில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தின் ஒரு பகுதி தண்டாயுதபாணி சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு மீதமான பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் நோய் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நோக்கில் பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது.

ப்ரக்டோஸ் – மகிழ்ச்சி உணர்வு
தினமும் 2 ஸ்பூன் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதால், இதில் உள்ள ப்ரக்டோஸ் செரோடோன் ஹார்மோனை சுரக்க உதவுகிறது. செரோடோன் மகிழ்ச்சி உணர்வை தூண்டும் ஹார்மோனாகும்.

இந்த அனைத்துச் சிறப்புகளால் பழனி பஞ்சாமிர்தம் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. அதற்குப் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம் – அதிசய மருத்துவ குணங்கள் | AthibAn TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here