திருப்பாவை – பாசுரம் பன்னிரண்டு
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய்
மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்…..
திருவெம்பாவை – பாசுரம் பன்னிரண்டு
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்து கரந்தும் விளையாடி
காத்தும் படைத்து கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய்.
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய்…..