Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...
HomeSongsபார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே... பாடல்

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே… பாடல்

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.

இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.

மண்ணுலகு வாழவென்று அவதரித்தானே
அவன் மாட்சியுற சபரிகிரி மீ தமர்ந்தானே
இந்த விண்ணுலகும் ஏற்றுகின்ற பெருமை பெற்றானே
புகழ் வீரமணி கண்டனவன் தாள் பணிவோமே.

இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.

பந்தளத்து மன்னனுக்கு பாலக னாகி – என்றும்
பணிவுடனே அற்புதங்கள் பலவும் புரிந்தான்
இனிவந்த வேலை முடிந்ததென்று வனமது சென்றான்
அங்கு வண்ணமுற தவ மதிலே வாழ்வது கண்டான்.

இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.

சரணமையா என்றுரைத்தால் சஞ்சலம் தீர்ப்பான
தக்க தருணமதில் வந்துதவி கரமும் கொடுப்பான்
இனி மரணபயம் ஏதுமில்லை மன்ன னவனால்
மனக்கண்களிலே கண்டு துதி பாடிடுவோமே.

இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here