Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeSpiritualityஇராமாயணம்-1 வால்மீகி, ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன்..!

இராமாயணம்-1 வால்மீகி, ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன்..!

லட்சுமி நரசிம்ம மந்திரம்ராமாயணம் இதிகாசம் இயற்றிய வால்மீகி பண்டைக்காலத்தில் நம் நாட்டிலே முற்றிலும் பண்பாடு அடைந்துள்ள மேன்மகன் ஒருவனை ரிஷி என்று அழைப்பது வழக்கம் அந்த இலட்சியம் மங்கிப் போகாது இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது ரிஷி ஸ்தானம் பெறுவதற்கு பிறப்புரிமை ஏதுமில்லை மக்களுள் யார் வேண்டுமானாலும் ரிஷி ஆகலாம் ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி அந்த பண்பின் பொருட்டு முழுமதோடு முயல வேண்டும் அடக்கம் பழகுதலின் விளைவாக அந்தவனுக்கு ஞானக்கண் வாய்க்கிறது ரிஷி ஒருவன் ஞான வடிவினன் ஆகிறான் ஞானம் மனத்தகத்தின்று தானாக உதயமாகிறது புறத்தி நின்று அது ஊட்டப்படுவது அன்று சுய முயற்சியைக் கொண்டு வால்மீகி ஒரு மகரிஷி ஆனார் தத்துவ தரிசனம் தானாக அவருக்கு வந்து வாய்த்தது அவர் இயற்றி இருக்கும் ராமாயணமே அதற்கு அத்தாட்சியாகிறது அதனிடத்தில் எளிமையும் இனிமையும் மகிமையும் ஒன்று சேர்ந்து அமைந்திருக்கின்றன வால்மீகி ஒரு ஞானியர் வம்சப் பரம்பரையில் வந்தவர் அல்லர் அவர் பிறப்பெடுத்தது ஒரு பாமரனாக வழிப்போக்குகர்களை கொள்ளை எடுக்கும் திருடனாக அவர் தமது ஜீவிதத்தை துவக்கினார் வழியில் போன நாரத மகரிஷியை தாக்கி அவரைக் கொள்ளையடிக்க அத்திருடன் முயன்றான் நல்லான் ஒருவனுடைய போக்கு அத்தகையதன்று என்று மகரிஷி அவனை திரஸ்கரித்தார் எப்படியாவது தன் குடும்பத்தை காப்பாற்றி வரவேண்டும் என்று திருடன் தன் செயலை ஆதரித்து பேசினான் நல்வழியில் செல்வம் சம்பாதிக்க இயலாவிட்டால் கெட்ட வழியிலாவது அதைத் தேடித்தான் ஆகவேண்டும் என்பது அவன் கருத்து திருடுதலும் கொலை புரிதலும் மகாபாவங்கள் உற்றார் உறவினர் அப்பாபத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்று நாரதர் அவருக்கு எச்சரிக்கை பண்ணினார் இப்படி அவர் இயம்பியது உண்மையா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள அவன் தன் வீட்டுக்குப் போனான் அவனுடைய சுத்தார் அவன் சம்பாதித்த செல்வத்துக்கே உரிமையாளர் என்றும் அவனுடைய பாவத்துக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் இயம்பினர் இதைக் கேட்ட அம்மனிதன் திகைத்துப் போனான் மானுட வாழ்க்கைக்குரிய இப்பேரன் அவன் உள்ளத்தில் அதிர்ச்சியை உண்டு பண்ணியது அவனுக்கு நல்லறிவு வந்தது நாரதரிடம் திரும்பி ஓடி வந்து தான் செய்த தீமைக்கு கழுவாய் வேண்டி நின்றான் அந்த திருடன் மீது இரக்கம் கொண்ட தேவரிஷி ராமா என்னும் மந்திரத்தை ஜெபிக்கும்படி அவனுக்கு உபதேசம் பண்ணினார் ஆனால் அந்த பாமரனுக்கு அந்த மந்திரத்தை மரா என்று மட்டும் தலைகீழாகி உச்சரிக்க இயன்றது அப்படியே செய்யும்படி அவனுக்கு உற்சாகம் ஊட்டிவிட்டு ரிஷி தம் போக்கில் போனார் மரா மரா என்று அவன் உச்சரித்தான் நாளடைவில் அந்த உச்சரிப்பு ராமா ராமா என்று தானாகவே மாறிவிட்டது அது அவனுடைய மனத்தை மாற்றி அமைத்தது தூய வாழ்வு வாழ அவன் ஆரம்பித்தான் கெட்ட தடவி நின்று விழித்துக் கொள்வதற்கு நிகராக இந்த மாறுதல் தானாக அவனுக்கு அமைந்தது ராம நாம உச்சரிப்பில் அவன் ஆழ்ந்து ஈடுபட்டான் உடல் ஞாபகத்தை அவன் தாண்டியவன் ஆனான் ராம நாம உச்சாரணையில் அவனுக்கு பேரானந்தம் உண்டா இயற்று அந்த சப்த பிரம்ம தியானத்தில் அவன் அமர்ந்தான் நாட்டம் அந்தர்முகப்பட்டது நாளடைவில் புற்று ஒன்று கிளம்பி அவன் உடலை மூடிவிட்டது சமாதியில் இருந்த அன்னவனுக்கு அது ஒன்றும் தெரியவில்லை அக்காரணத்தை முன்னிட்டு அவ்விபிரருக்கு வால்மீகி என்னும் பெயர் வந்தது புற்றுங்கண் பரிபக்குவம் அடைந்த சான்றோன் என்பது அந்த நாமத்தின் உட்கொள் ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன் ராம என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வால்மீகி மகரிஷி பரிபக்குவம் அடைந்தார் ஸ்ரீராமனுடைய பூலோக வரலாறு முழுதும் அவர் உள்ளத்தில் உதயமாயிற்று அப்படி உதயமானதே ராமாயணம் என்னும் ஆதிகாவியமாக அவர் அமைத்தார் அவதார மூர்த்தி ஒருவர் உலகத்தில் தோன்றும் பொழுது அவருடைய வரலாற்றைக் குறிக்க மகரிஷி ஒருவரும் அதே காலத்தில் தோன்றி வருகிறார் அக்கோட்பாட்டின்படி ஸ்ரீராமனுடைய பூலோக லீலையை குறித்து வைக்க வால்மீகி மகரிஷி தோன்றினார் நூலாசிரியரும் கதாநாயகனும் ஆகிய இருவரும் தெய்வீகம் நிறைந்த மூர்த்திகள் அதை முன்னிட்டு இராமாயணமும் தெய்வீகம் நிறைந்த இதிகாசம் ஆகிறது ராமாயணம் பூவுலகில் பண்பாடி வடிவெடுத்துள்ள இலக்கியங்களுள் ராமாயணம் தலைசிறந்ததாக திகழ்கிறது இது உருவெடுத்தது இந்தியாவில் எனினும் மானுட வர்க்கம் முழுவதின் மனதை கவர உள்ளதாக இது இருக்கிறது குழந்தை ஒன்று ராமாயணம் கேட்டு பதில் உற்சாகம் போடுகிறது பாமரன் ஒருவன் இராமாயணம் கேட்டு பண்பாடு அடைகிறான் பண்டிதர் ஒருவரின் சிந்தனா சக்தியை இது வளர்க்கிறது ஆத்ம சாதகன் ஒருவனுக்கு இது அருள் நாட்டத்தை ஊட்டுகிறது ஞானி ஒருவனுடைய ஞானத்தை இது உறுதிப்படுத்துகிறது திரும்பத் திரும்ப படிப்பதால் இராமாயணத்தில் யாருக்கும் சலிப்பு தட்டுவதில்லை நீரினுள் மூழ்கி நீராடுவதால் மேனி தெளிவடைகிறது அதே விதத்தில் இந்த இதிகாச ஆராய்ச்சியால் மனது தெளிவடைகிறது உணவு உடலை பேணுவது போன்று இந்நூல் அறிவை வளர்கிறது பண்பாடு அடைய முயல்கின்றவனுக்கு வாழ்நாள் முழுதும் துணையாய் அமைந்திருப்பது ராமாயணம் அழிவற்ற இந்நூல் ஸ்ரீராமன் என்னும் மூர்த்தியை நடுநாயகமாகக் கொண்டுள்ளது ஆகையினால் இது ராமாயணம் என்னும் பெயர் பெற்றிருக்கிறது ராமசரிதம் என்பது இதன் பொருள் இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் ஆத்ம ஞானத்தில் திளைத்திருக்கும் தபஸ்விகளுக்கும் ஸ்ரீராமன் முன்மாதிரியாகிறான் அறநெறியை வடிவெடுத்தவன் அவன் எல்லா சந்தர்ப்பங்களிலும் அறத்தை கடைபிடிப்பவனாக அவன் இளங்குகிறான் மண்ணுலகில் தோற்றத்துக்கு வந்துள்ள அவன் யாண்டும் பரத்திலேயே நிலை பெற்றவனாக பொழிகின்றான் இராமனுக்கேற்ற கற்பு வாய்ந்த மனைவி சீதை சீதை என்னும் சொல் படைச்சால் எனப் பொருள்படுகிறது இச்சிறுமைக்குப் பெற்றோர் இல்லை பூமகளின் செல்வியாக படைச்சாலில் இவள் கண்டெடுக்கப்பட்டு ஜனக மகாராஜாவினால் வளர்க்கப்பட்டாள் சீதை புனிதத்திற்கும் பெண்மைக்கும் உறைவிடமானாள் அமைதியுடன் சகித்துக் கொள்ளுதல் வாயிலாக அவள் துயரத்தை வென்றாள் பெண்ணின் பண்புக்கு முடிந்த குறிக்கோளாக சீதை இளங்குகின்றாள் நலம் கேடு ஆகிய இரண்டையும் இயற்கை உடைத்திருக்கிறது இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள போராட்டம் எங்கும் புலனாகிறது இராமாயணத்தில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் ராட்சசர்கள் என்றும் கூறப்படுகின்றனர் இது உலகைப் பற்றிய மற்றொரு உண்மை தனக்கு எதிரி இல்லாத ஜீவ ஜந்து உலகில் இல்லை எனவே எதிரியை சமாளிப்பது யாழ்ந்தம் வாழ்க்கை பிரச்சனையாக இருந்து வருகிறது எதிரியை சமாளிப்பது வாழ்க்கை பயிற்சி ஆகிறது வலிவு படைத்ததே வாழ்க்கைக்கு தகுதி உடையதாகிறது வலிவைப் பெறுவதும் எதிரியை சமாளிப்பதும் ராமாயணம் கொடுக்கும் பாடங்கள் ஆகின்றன ராமபாணம் வலிவுக்கும் நேர்மைக்கும் சின்னமாகிறது அது வீண் போவதில்லை அறநெறி காப்பவர் வாழ்க்கையில் சோதனைகள் அதிகம் அவைகளை முறையாக சமாளிப்பவன் வாழ்க்கையில் வெற்றி அடைகிறான் இது ராமாயணம் புகட்டும் பாடமாகிறது காமமும் பொருளாசையும் மனிதனை கெட்ட வழியில் தூண்டுகின்றன இவ்விரண்டினுள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு ராமாயணம் உருவெடுக்கிறது அயோத்தியாபுரி கிஷ்கிந்தே இலங்கை ஆகிய மூன்றும் தலைமைப் பட்டணங்கள் அயோத்தியாபுரியில் தசரத மன்னன் தனக்கு வாய்த்த மனைவிமார் மூவரிலும் கைகேயினிடம் அளவு கலந்த அன்பு காட்டினான் அதன் விளைவாக சிறிதளவு தீங்கு வடிவெடுத்து கிஷ்கிந்தையில் காமம் ஓரளவு அதிகரித்திருந்தது அதன் விளைவாக வாலியும் சுக்ரீவனும் சிறிது காலம் பிரிந்திருந்தார்கள் லங்காபுரியிலோ இராவணன் காம நோய்க்கு முற்றிலும் வசப்பட்டு இருந்தான் அதன் விளைவாக இராவணனும் அவனைச் சார்ந்திருந்தவர்களும் அழிந்துபட்டு போயினர் ஸ்ரீராமன் இந்த மூன்று இடங்களில் மூன்று தியான முறைகளை கையாண்டு காம நோயை துடைக்கிறான் சமுதாயத்தில் உள்ள தீங்குகள் பலவற்றிற்கு காரணம் காமம் அவைகளை ராமாயணம் எடுத்துக் காட்டுகின்றது காமத்தை வெல்லுவதற்கு ஏற்ப மனிதன் தெய்வத்தன்மையில் ஓங்குகிறான் இராமன் ஏகபத்தினி விரதம் பூண்டிருந்தான் இல்வாழ்வு வாழ்ந்ததற்கிடையில் அவன் காமத்தை வென்றவன் இராமனும் சீதையும் நெடுங்காலம் தவத்தில் ஈடுபட்டிருந்தனர் சந்தானத்தின் பொருட்டு அவர்கள் இருவரும் ஒரே ஒரு தடவை கூறினர் பெற்றோரின் புனிதத்தையும் பரிபாகத்தையும் முகாமையாகக் கொண்டு அவர்களுக்கு வாய்த்த சந்தானம் தெய்வீகமே வடிவெடுத்திருந்தது சந்தானத்தை பெறும் விஷயத்தில் இவ்வுலகமானது சீதாராமனைப் பின்பற்றுமானால் அது புனிதம் நிறைந்த நல்லுலகம் ஆகும் ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன் ராம என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வால்மீகி மகரிஷி பரிபக்குவம் அடைந்தார் ஸ்ரீராமனுடைய பூலோக வரலாறு முழுதும் அவர் உள்ளத்தில் உதயமாயிற்று அப்படி உதயமானதே ராமாயணம் என்னும் ஆதிகாவியமாக அவர் அமைத்தார் அவதார மூர்த்தி ஒருவர் உலகத்தில் தோன்றும் பொழுது அவருடைய வரலாற்றைக் குறிக்க மகரிஷி ஒருவரும் அதே காலத்தில் தோன்றி வருகிறார் அக்கோட்பாட்டின்படி ஸ்ரீராமருடைய பூலோக லீலையை குறித்து வைக்க வால்மீகி மகரிஷி தோன்றினார் நூலாசிரியரும் கதாநாயகனும் ஆகிய இருவரும் தெய்வீகம் நிறைந்த மூர்த்திகள் அதை முன்னிட்டு இராமாயணமும் தெய்வீகம் நிறைந்த இதிகாசம் ஆகிறது.

இராமாயணம்-1 வால்மீகி, ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here