Type Here to Get Search Results !

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 20

திருப்பாவை - பாசுரம் இருபது

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்…..

திருவெம்பாவை - பாசுரம் இருபது

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்…..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.