Type Here to Get Search Results !

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 21

திருப்பாவை - பாசுரம் இருபது ஒன்று

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்

ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்

தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே

ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

திருப்பள்ளியெழுச்சி - பாடல் ஒன்று

போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே

போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே….

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.