Type Here to Get Search Results !

மாா்கழி - திருப்பாவை திருவெம்பாவை - பாசுரம் 7

திருப்பாவை - பாசுரம் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!…..

திருவெம்பாவை - பாசுரம் 7

அன்னே, இவையும் சிலவோ? பலவமரர்

அன்னே, இவையும் சிலவோ? பலவமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்!

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்!

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்!

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்!

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ?

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ?

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,

என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்!

என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்!……

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.