Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...
HomeSongsகலைவாணி நின் கருணை தேன்மழையே... பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையே… பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here