திருப்பாவை – பாசுரம் பதினைந்து
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள்
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்!
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்!….
திருவெம்பாவை – பாசுரம் பதினைந்து
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்…..