Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

அசல் வந்தே மாதரம் பாடல் வரிகள்

வந்தே மாதரம், வந்தே மாதரம் — (4) (அம்மையே, உமக்கே வணக்கம் — 4 முறை) **Sujlaam sufaam malyaj sheetlam Shasya shyamlam mataram vande** நீரெழுந்து செழித்து நிறைந்தவளும்,தணிவூட்டும் மலைகள் மணம் வீசும் நிலமும்,பசுமையாக தழைத்துள்ள...
HomeSongsமுத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்... பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் – அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்
மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் – அவள்
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் – அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
நெய் விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கி வரும் முரசங்களை கேட்டிடுவாளாம் – அவள்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here