திருப்பாவை – பாசுரம் 24
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்….
திருப்பள்ளியெழுச்சி – பாடல் 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!….