திருப்பாவை – பாசுரம் 26
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.
திருப்பள்ளியெழுச்சி – பாடல் 6
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார் அணங்கின் மணவாளா!
வணங்குகின் றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ்
செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே.
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே…..