திருப்பாவை – பாசுரம் 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
திருப்பள்ளியெழுச்சி – பாடல் 7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்;
அரிதென எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திருவுத்தர கோச
மதுவளர் பொழில்திருவுத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
மங்கையுள் ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே.
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே….