திருப்பாவை – பாசுரம் 28
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.
திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய்
அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.
ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.