கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டு
காஞ்சி காமாட்சி பாலவிளையிலே
கறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடு
காசி விசாலாட்சி பாலவிளையிலே
கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டு
காஞ்சி காமாட்சி பாலவிளையிலே
கறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடு
காசி விசாலாட்சி பாலவிளையிலே
ஆறிலும் சாவு நூறிலும் சாவு புரியவைத்திடுவா படை பத்ரகாளி
ஆனந்தமாக வாழ்ந்திடுங்கள் என புரிய வைப்பா பாலவிளை பத்ரேஸ்வரி
பாலவிளை தாயை பார்க்க பார்க்க பாவங்கள் குறையும்
பாலவிளை தாயை பார்த்த உடனே பாரங்கள் குறையும்
காவல் காத்திடு பத்ரேஸ்வரி
ஏவல் நீக்கிடு பத்ரேஸ்வரி
கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டு
காஞ்சி காமாட்சி பாலவிளையிலே
கறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடு
காசி விசாலாட்சி பாலவிளையிலே
வாழைமரம் கட்டி தோரணம் கட்டி ஊர் கூடி நடத்துது திருவிழா
வண்ணஒளி காட்டி மின்னும் ஒளி அழகில் ஜொலிக்குது திருவிழா
வெற்றிலை கிள்ளி எடுத்து துளசி மலரெடுத்து செய்கிறோம் அர்ச்சனை
உனது பரவசத்தை காட்டி தருது உன் முக பாவனை
காவல் காத்திடு பத்ரேஸ்வரி
ஏவல் நீக்கிடு பத்ரேஸ்வரி
கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டு
காஞ்சி காமாட்சி பாலவிளையிலே
கறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடு
காசி விசாலாட்சி பாலவிளையிலே
சிவந்த சூரியனை நெற்றியிலே வைத்துக்கொண்டு
தலையில் சந்திரனை கொண்டவனை கொண்டவளே
புண்ணியம் செய்தவர்க்கு பூவுண்டு நீருண்டு
புண்ணியவதி உன்னால் எங்களுக்கு பூவுண்டு நீருண்டு
காவல் காத்திடு பத்ரேஸ்வரி
ஏவல் நீக்கிடு பத்ரேஸ்வரி
கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டு
காஞ்சி காமாட்சி பாலவிளையிலே
கறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடு
காசி விசாலாட்சி பாலவிளையிலே
காவல் காத்திடு பத்ரேஸ்வரி
ஏவல் நீக்கிடு பத்ரேஸ்வரி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd