பாலூர் பத்ரேஸ்வரி உனக்கு பாமாலை பாடுகிறேன்
பாவமெல்லாம் தீரும் வரை உந்தன் காலடியில் பிறக்கிறேன்
கோடி மக்கள் நெஞ்சில் வாழும் கோமகளே
கோயில் தோறும் குடிகொண்ட பத்ரேஸ்வரி
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாலூர் பத்ரேஸ்வரி உனக்கு பாமாலை பாடுகிறேன்
பாவமெல்லாம் தீரும் வரை உந்தன் காலடியில் பிறக்கிறேன்
கோடி மக்கள் நெஞ்சில் வாழும் கோமகளே
கோயில் தோறும் குடிகொண்ட பத்ரேஸ்வரி
சிவப்பு சேலையிலே சிங்காரி மயக்கிடுவா
பச்சை சேலையிலே பத்தினியா வாழவைப்பா
ஆங்காரி
ஓம்காரி
பத்ரேஸ்வரி
ஆனந்த புன்னகையில் உலகாளுவா
வேப்பிலையில் குடிகொண்டு வேண்டுதலை தந்திடுவா
முககாப்பினிலே முத்துமணி முழுமதியால் ஜொலித்திடுவா
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாலூர் பத்ரேஸ்வரி உனக்கு பாமாலை பாடுகிறேன்
பாவமெல்லாம் தீரும் வரை உந்தன் காலடியில் பிறக்கிறேன்
கோடி மக்கள் நெஞ்சில் வாழும் கோமகளே
கோயில் தோறும் குடிகொண்ட பத்ரேஸ்வரி
மனம் மகிழ மலரால் அபிஷேகம் குணம் உயர தரணும் நல்ல ஞானம்
கண் இமை இரண்டும் இணையும் போதும் நீ மறையவில்லை
பண் பாடவே உன்னால் எனக்கு ஓர் குறையில்லை
அச்சமில்லையே அன்னகிளி உனை வணங்கிட
துச்சமென போய்விடும் வரும் துயரெல்லாம்
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாலூர் பத்ரேஸ்வரி உனக்கு பாமாலை பாடுகிறேன்
பாவமெல்லாம் தீரும் வரை உந்தன் காலடியில் பிறக்கிறேன்
கோடி மக்கள் நெஞ்சில் வாழும் கோமகளே
கோயில் தோறும் குடிகொண்ட பத்ரேஸ்வரி
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாலூர் பத்ரேஸ்வரி பாரின் வழிகாட்டி
பாடி துதித்திடவே வந்திடுவா ஓடோடி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd